பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 18 பேர்

by Staff / 05-02-2024 04:27:59pm
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 18 பேர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே சிற்றார் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மிகவும் நெருக்கமாக பழகிய இவர்கள் நிர்வாண போட்டோக்களை பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து அந்த போட்டோவை காட்டி மிரட்டி மாணவியை பலாத்காரம் செய்துள்ள அந்த வாலிபர், பின்னர் அந்த போட்டோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து பித்துபிடித்தது போல் இருந்த அந்த மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தபோது நிர்வாண போட்டோவை காட்டி இதுவரை உடன் படித்தவர்கள் உட்பட 18 பேர் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via