திருமணமான 3 மாதங்களில் கணவன், மனைவி மரணம்

by Staff / 27-02-2024 03:50:19pm
திருமணமான 3 மாதங்களில் கணவன், மனைவி மரணம்

உத்திர பிரதேசம், காஜியாபாத்தை சேர்ந்தவர் அபிஷேக் அலுவாலி (25), இவரது மனைவி அஞ்சலி. கடந்த நவம்பர் மாதம்தான் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்துமுடிந்துள்ளது. இந்நிலையில் அபிஷேக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது சடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். கணவனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத அஞ்சலி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். திருமணம் ஆகி 3 மாதங்களில் கணவன் - மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via