எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட தயார் - ஜவாஹிருல்லா

by Staff / 02-03-2024 11:59:44am
எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட தயார் - ஜவாஹிருல்லா

மக்களவைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சிக்கு, ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்று அழுத்தமான கோரிக்கை வைத்துள்ளோம் என மமக தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். குறிப்பிட்ட தொகுதியை தர வேண்டும் என கேட்கவில்லை. எந்த தொகுதியாக இருந்தாலும் போட்டியிட தயாராக உள்ளோம். இந்தியா முழுவதும் ஒரு எடுத்துக்காட்டான கூட்டணி, திமுக தலைமையில் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என்று கூறினார்.முன்னதாக திமுக கூட்டணியில் சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது.

 

Tags :

Share via