மச்சினிச்சி உடன் கள்ளக்காதல்.. மனைவி தற்கொலை

by Staff / 08-03-2024 11:52:31am
மச்சினிச்சி உடன் கள்ளக்காதல்.. மனைவி தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன். இவரது மனைவி சந்தியா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. குமரனுக்கு சந்தியாவின் தங்கையான 20 வயது பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் குறித்து தெரிந்துகொண்ட சந்தியா கணவனும், தங்கையும் தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். குமரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via