டெல்லியில் மகாபஞ்சாயத்து - விவசாயிகள் முழக்கம்

by Staff / 14-03-2024 04:30:35pm
டெல்லியில் மகாபஞ்சாயத்து - விவசாயிகள் முழக்கம்

விவசாய அமைப்புகள் இன்று டெல்லியில் கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது தெரிந்ததே. மத்திய அரசின் விவசாய விரோதக் கொள்கைளை எதிர்ப்பதாக கூறி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று (மார்ச்14 ) நடந்த ‘கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்து’ நிகழ்வில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அரசின் கொள்கைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க கிசான் மஸ்தூர் மகாபஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தது.

 

Tags :

Share via