பெண்ணுடன் பழகுவதில் மோதல் கண்ணாடி துண்டுகளால் சரமாரியாக குத்திகொலை

by Staff / 31-03-2024 12:40:27pm
பெண்ணுடன் பழகுவதில் மோதல் கண்ணாடி துண்டுகளால் சரமாரியாக குத்திகொலை

தேனி மாவட்டம்  கம்பத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (25). திருமணமாகாத இவர் கூலிவேலை செய்து வந்தார். இவருக்கும் ஆங்கூர்பாளையம் சாலையில் வசித்து வரும் நந்தினி (31) என்பவருக்கும் பழக்கம் இருந்துள்ளது. நந்தினியுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்து பிரிந்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் பிரபாகரன் மீண்டும் நந்தினியிடம் சேர்ந்துள்ளார். இதனையடுத்து சதீஷ்குமார் வெள்ளிக்கிழமை நந்தினியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, நந்தினியும், பிரபாகரனும் இருந்ததை கண்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.அப்போது ஆத்திரமடைந்த நந்தினி, பிரபாகரன் ஆகிய இருவரும் சதீஷ்குமாரை கண்ணாடி துண்டுகளால் சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் சதீஷ்குமாரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தினி, பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via