அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து - 5 பேர் பலி

by Staff / 09-04-2024 12:45:30pm
அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து - 5 பேர் பலி

திருப்பூர் காங்கயம் அருகேவுள்ள ஓலப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த சந்திரசேகர் (60) , சித்ரா (57), இளவரசன் (26), அரிவித்ரா (30), மூன்று மாத பெண் குழந்தை உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒருவர் காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர்ந்து, இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via