மகள் திடீர் தற்கொலை.. தந்தை கைது

by Staff / 14-04-2024 01:13:57pm
மகள் திடீர் தற்கொலை.. தந்தை கைது

கள்ளக்குறிச்சியில் மகள் இறப்பிற்கு தந்தைதான் காரணம் என பாட்டி கொடுத்த புகாரின் பேரில் தந்தையை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கேசவலு நகரைச் சேர்ந்தவர் மணி மகள் வினோதினி (17). இவரது தாய் பழனியம்மாள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், மணி அடிக்கடி குடித்து விட்டு மது போதையில் மகள் வினோதினியை திட்டுவது வழக்கம். இதனால் மனமுடைந்த வினோதினி கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வினோதினியின் தற்கொலைக்கு காரணமான அவரது தந்தை மணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வினோதியினின் பாட்டி ஜெயலலிதா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து மணியை கைது செய்தனர்.

 

Tags :

Share via