270 முறை விதி மீறல்.. ரூ.1.36 லட்சம் அபராதம்

by Staff / 16-04-2024 04:18:38pm
270 முறை விதி மீறல்.. ரூ.1.36 லட்சம் அபராதம்

பெங்களூருவில் பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தனது ஸ்கூட்டரில் தலைக்கவசம் அணியாமல் சென்றது. போக்குவரத்து விதிகளை மீறியது. இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என இவை அனைத்திற்கும் மொத்தமாக ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவர் வைத்திருக்கும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விலையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் மொத்தம் 270 முறை அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார்.

 

Tags :

Share via