6 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு.

by Editor / 30-04-2024 11:13:17am
6 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு.

மணிப்பூரில் உள்ள 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 19ஆம் தேதியும், 13 சட்டசபை தொகுதிகளுக்கு 26ஆம் தேதியும் தேர்தல் நடந்தது. 2 கட்டங்களாக நடந்த தேர்தலின்போது ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில் வாக்குப்பதிவு தடைபட்ட 6 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது.

 

Tags : 6 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் இன்று (ஏப்ரல் 30) மறுவாக்குப்பதிவு

Share via