காதல் திருமணம்.. மகளின் கழுத்தை கத்தியால் அறுத்த தந்தை

by Editor / 17-08-2021 09:54:19am
காதல் திருமணம்.. மகளின் கழுத்தை கத்தியால் அறுத்த தந்தை

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி மடத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் பிரியங்கா. பிரியங்கா அவிநாசி பகுதியை சேர்ந்த முகமது யாசின் என்பவருடன் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

இருவரும் கடந்த சில வருடமாக காதலித்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. இவர்களின் காதலுக்கு தொடக்கத்தில் இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்க, காதல் ஜோடி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துள்ளது.திருமணத்திற்கு பின்னர் மகன் என்ற பாசத்தில் முகமது யாஷினின் பெற்றோர்கள் மகனின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, புதுமண காதல் ஜோடி சிங்காநல்லூரில் வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில், மகள் மீது ஆத்திரத்தில் இருந்த ராஜா, சம்பவத்தன்று மதுபோதையில் முகமது யாசின் வீட்டிற்குச் சென்று, தனியாக இருந்த மகள் பிரியங்காவின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

காயங்களுடன் உயிருக்கு போராடிய பிரியங்காவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிரியங்காவின் வாக்குமூலத்தின் பெயரில் அவிநாசி காவல்துறையினர் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

Tags :

Share via