3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Editor / 01-09-2021 10:03:15am
3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சிக்கு வந்து 116 நாட்களில் 2 கோடியே 63 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளது; அதிமுக அரசு 100 நாட்களில் போட்ட தடுப்பூசிகளை விட, திமுக அரசு 100 நாட்களில் 2 மடங்கு தடுப்பூசி போட்டுள்ளது. 3.5 கோடி பேருக்கு அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; 21.28 லட்சம் பேருக்கு தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கல்லூரிலேயே கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

 

Tags :

Share via