கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - டிஜிபி சைலேந்திரபாபு

by Editor / 25-09-2021 07:49:10pm
கூலிப்படையினர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் - டிஜிபி சைலேந்திரபாபு

தென்மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் கொலை சம்பவங்களை தடுக்கும் வகையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக்கண்ணன், தென் மண்டல ஐஜி அன்பு, நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு மற்றும் நெல்லை தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்  பங்கேற்றனர்.

கூட்டத்தில் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பழிக்கு பழியாக தொடர்ந்து நடந்து வரும் கொலைச் சம்பவங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ரவுடிகள் கைது மற்றும் ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில் , கடந்த 48 மணிநேரத்தில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 2513 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்களிடமிருந்து துப்பாக்கி அரிவாள் உள்ளிட்ட 925 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது இல்லை என்றும் பழிக்குப்பழியான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க கூலிப்படையினர் ஆதிக்கம் முற்றுப்புள்ளி வைக்கப்படும்  என தெரிவித்தார்.நெல்லை திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பழிக்குப்பழியாக கொலைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட கூடியவர்களை தனிப்படையினர் அமைத்து கண்காணித்து கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via