சென்னை கோயம்பேடு அருகே பரபரப்பு  ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து: 

by Editor / 29-09-2021 04:26:19pm
சென்னை கோயம்பேடு அருகே பரபரப்பு  ஓடும் பேருந்தில் திடீர் தீவிபத்து: 


சென்னை கோயம்பேடு அருகே திடீரென ஓடும் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு அருகே சென்னை மாநகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பேருந்திலிருந்த ஓட்டுனர் நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் கீழே இறங்கினார்கள். 


இந்த நிலையில் இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த தீ விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via