தூத்துக்குடியில் 8 மாத குழந்தை  ரூ.3 லட்சத்துக்கு விற்பனை.4 பேர் மீது வழக்கு

by Editor / 30-09-2021 04:48:47pm
தூத்துக்குடியில் 8 மாத குழந்தை  ரூ.3 லட்சத்துக்கு விற்பனை.4 பேர் மீது வழக்கு


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன்... இவருடைய மகன் மணிகண்டன்.. 38 வயதாகிறது.. இவருக்கும், தூத்துக்குடி கொத்தனார் காலனியை சேர்ந்த ஜெபமலர் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஜெபமலருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெபமலர் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தூத்துக்குடிக்கு வந்துவிட்டார்.

இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அப்போது வீட்டில் குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக ஜெபமலரிடம் கேட்டபோது மழுப்பலாக பதில் கூறியதாக தெரிகிறது.இதனால் சந்தேகமடைந்த மணிகண்டன், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்ததில், ஜெபமலர் தனது குழந்தையை விருதுநகரைச் சேர்ந்த புரோக்கர் ஜேசுதாஸ் என்பவர் மூலமாக தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தோணி, கிருபா, செல்வராஜ், டேனியல் ஆகியோருடன் சேர்ந்து ரூ.3 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை மீட்டுத்தரக் கோரி தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் அளித்தார்.அந்த புகாரின்பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார், குழந்தையின் தாய் ஜெபமலர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via