போதைக்கு அடிமையான அண்ணனை கண்டித்த தங்கை கொலை

by Editor / 04-12-2021 12:57:07pm
 போதைக்கு அடிமையான அண்ணனை கண்டித்த தங்கை கொலை

 ராமநாதபுரத்தில் நேரு நகர் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கஞ்சாபேதைக்கு  அடிமையான மகன் சரண் அவ்வபோது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கஞ்சா போதையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த மகன் சரண் குடும்பத்தாரிடம் சண்டைபோட்டதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து அவரது  தங்கை சுவாதி, சரணை கண்டித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சரண், தங்கை எனும் பாராமல் அவரை வீட்டிலிருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டார்.
 
வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிவந்து பார்த்தபோது  மகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள்இது  குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்துவந்த கேணிக்கரை காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சகோதரியை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய சரணை தேடி வருகின்றனர்.இந்த சமத்துவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

Tags :

Share via