தென்காசி அருகே ரூ. 10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

by Editor / 22-12-2021 12:10:51am
தென்காசி அருகே  ரூ. 10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு


தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் அருள்மிகு கோபாலகிருஷ்ணன் சுவாமிகோயிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் நேற்று  ஒப்படைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் அருள்மிகு கோபாலகிருஷ்ணன் சுவாமி வகையறா திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம்(9.73 ஏக்கர்). கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ளது.புஞ்சை நிலமான இந்நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் ,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதன்படி சென்னை இந்து சமய அறநிலை துறை ஆணையர் உத்தரவின்பேரில்  தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன், கடையநல்லூர் தாசில்தார்   ஆதி நாராயணன்,  தென்காசி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோமதி,ஆகியோர் முன்னிலையில் நிலம் மீட்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
 

தென்காசி அருகே  ரூ. 10 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
 

Tags :

Share via