சுங்கத்துறை அதிரடிசோதனையில் ஹவாலா பணம் ரூ.1.15 கோடி பறிமுதல்செய்யப்பட்டது

by Admin / 27-12-2021 05:23:29pm
சுங்கத்துறை அதிரடிசோதனையில் ஹவாலா பணம் ரூ.1.15 கோடி பறிமுதல்செய்யப்பட்டது

 
சென்னையிலிருந்து சாா்ஜா செல்லும் விமானத்தில் பெருமளவு வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் உள்ள DRI அலுவலகத்திலிருந்து, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சென்னையிலிருந்து சாா்ஜா,துபாய்,அபுதாபி செல்லும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.

இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து சாா்ஜா செல்லவிருந்த இண்டிகோ  பயணிகளை தீவிரமாக கண்காணித்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான 5 பயணிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 4 பயணிகளின் உடமைகளில் வெளிநாட்டு கரண்சி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

5 வதாக சோதனை செய்த நபரின் சூட்கேஸ்சில், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் கரண்சிகள் மறைத்து வைத்திருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுப்பிடித்தனா். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்தனர்.
 
அதில் அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க கரண்சியின் மதிப்பு சுமார் ரு.1.15 கோடி என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பணம் அனைத்தும் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த ஹவாலா பணத்திற்கான உரிமையாளர் யார் ? என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்,
 

 

Tags :

Share via