11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி- புதுச்சேரிசுகாதாரத்துறை.

by Editor / 02-01-2022 11:52:55pm
11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி- புதுச்சேரிசுகாதாரத்துறை.

புதுச்சேரியில் ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா  தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல் ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்களிடம் எஸ்-ஜீன்-டிராப் உமிழ்நீர் பரிசோதனை எடுக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 நாட்களில் கரோனா பாதித்தவர்களுக்கு எஸ்-ஜீன்-டிராப் உமிழ்நீர் பரிசோதனை நடத்தியதில் புதுச்சேரி மாநிலத்தில் 11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியபட்டுள்ளது.

புதுச்சேரியில் 6 பேர், காரைக்காலில் 5 பேர் என 11 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளது. அவர்களின் உமிழ்நீர், ரத்த மாதிரிகள் பெங்களூரில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு அடுத்த 10 நாட்களில் வெளிவரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via