பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

by Editor / 10-01-2022 09:12:15pm
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக நாகர்கோவில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன. 

அதன்படி ஜனவரி 12, 13 ஆகிய நாட்களில்  கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 22668 கோயம்புத்தூர் - நாகர்கோவில் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஜனவரி 13, 14 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 22667 நாகர்கோவில் - கோயம்புத்தூர் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் இரண்டு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள் இணைக்கப்படும். 

மேலும் கோயம்புத்தூர் - மயிலாடுதுறை - கோயம்புத்தூர் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு  இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளும் 

மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்பட இருக்கின்றன என தென்னக இரயில்வே அறிவித்து உள்ளது.

 

Tags :

Share via