பாலக்காடு - திருநெல்வேலி ரயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க முடிவு

by Staff / 19-08-2023 04:35:09pm
பாலக்காடு - திருநெல்வேலி ரயிலை தூத்துக்குடிக்கு நீட்டிக்க முடிவு

பாலக்காடு - திருநெல்வேலி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதே போல கேரள மாநிலத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் இரண்டு புதிய ரயில்களை அனுமதித்துள்ளது. வேளாங்கண்ணி மற்றும் திருப்பதிக்கு புதிய ரயில்கள் இயக்கப்படவுள்ளது. கொல்லத்திலிருந்து திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து வேளாங்கண்ணிக்கும் ரயில் இயக்கப்படும். எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சேவை திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும், அங்கிருந்து மீண்டும், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்கள் இயக்கப்படும். எர்ணாகுளத்தில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணாவை சென்றடையும்.

 

Tags :

Share via