இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு

by Staff / 19-08-2023 04:32:00pm
இம்ரான் கான் சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அவர் அட்டாக் சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி தெரிவித்துள்ளார். இம்ரான் கானின் மனைவி சனிக்கிழமை பாகிஸ்தானின் பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், 'தனது கணவரை பஞ்சாபில் உள்ள அட்டாக் சிறையில் இருந்து அடியாலாவுக்கு மாற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்தவித நியாயமும் இல்லாமல் எனது கணவர் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி, என் கணவரை அடியாலா சிறைக்கு மாற்ற வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via