கடைசியாக ஜெயக்குமார் வாங்கிய பொருள்

by Staff / 09-05-2024 01:42:46pm
கடைசியாக ஜெயக்குமார் வாங்கிய பொருள்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தற்கொலையா? கொலையா? என தெரியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போவதற்கு முன் மே 2ம் தேதி அவர் திசையன்விளையில் உள்ள கடை ஒன்றில் இரவு 10 மணிக்கு டார்ச் லைட் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அவர் எதற்காக டார்ச் லைட் வாங்கினார்? என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர்.

 

Tags :

Share via