வனத்துறை சோதனையில் குட்கா பொருட்கள் பிடிப்பட்டது.

by Editor / 15-01-2022 10:25:06pm
வனத்துறை சோதனையில் குட்கா பொருட்கள் பிடிப்பட்டது.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி வனச்சரகர் சந்திரசேகர் தலைமையிலான வனக்காப்பாளர் நாராயணசாமி, கந்தசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் தெடாவூர் பகுதியில் இரவு நேர ஊரடங்கையொட்டி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக ஆத்தூரில் இருந்து தெடாவூர் நோக்கி வந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர் வாகனத்தை நிறுத்தி விட்டு மர்மநபர்கள் தப்பி ஓட்டம்,வாகனத்தைப் பிடித்து  சோதனை செய்ததில் சுமார் 10 இலட்ச ரூபாய் மதிப்பிலான 40 பண்டல்களில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

 

Tags :

Share via