சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற  செய்தியாளர் ராஜா சங்கர் உயிரிழப்பு.

by Editor / 02-05-2024 11:56:34pm
சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற  செய்தியாளர் ராஜா சங்கர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கடம்பன்குளத்தில் நேற்று நடந்த கல்குவாரி வெடிவிபத்தில் 3 பேர் பலியாயினர்.இதை செய்தி சேகரிக்க அருப்புக்கோட்டை தனியார் டிவி செய்தியாளர் ராஜா சங்கர் நேற்று சென்றிருந்தார்.மேலும் அச்சம்பவத்தின்  தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் நடவடிக்கைகளை செய்தியாக்க  இன்றும் சுட்டெரிக்கும் கடும் வெயிலில் சென்று செய்தி சேகரித்துவிட்டு உடல் சோர்வடைந்த நிலையில் தனது வாகனத்தில்  மீண்டும் அருப்புக்கோட்டைக்கு வந்த உடனேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.உயிரிழந்த ராஜா சங்கருக்கு தாய்தந்தை இல்லாத நிலையில் தான் திருமணம் செய்துகொள்ளாமல் மனநலம் பாதிக்கப்பட்ட தனது  சகோதரியை பராமரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.கோடை வெயிலின் தாக்கத்தால் செய்தியாளர் ஒருவர் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் செய்தியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

 

Tags : சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற  செய்தியாளர் ராஜா சங்கர் உயிரிழப்பு.

Share via