நாகர்கோவில் -எழும்பூர் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

by Editor / 16-01-2022 03:22:16pm
நாகர்கோவில் -எழும்பூர் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் அருகே உள்ள கோபாலசாமி நகர் ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனை பகுதியில் ரயில் பாதை புதுப்பிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அதன்படி ஜனவரி 20 முதல்  மார்ச் 3 வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் (12667) மற்றும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 25 வரை வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் அதிவிரைவு வாராந்திர ரயில் (12668) ஆகியவை தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

 

Tags :

Share via