கோரோனா சோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுத்தை உடல் நசுங்கி பலி

by Admin / 18-01-2022 04:32:39pm
கோரோனா  சோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த சிறுத்தை உடல் நசுங்கி பலி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த 17 வயது உடைய ஜெயா என்ற சிறுத்தை கூண்டுக்குள் உடல் நசுங்கி பலியானது.  

அங்கு 76 பூங்கா ஊழியர்களுக்கு தோற்று உறுதியானதை அடுத்து தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விலங்குகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பரிசோதனை செய்வதற்காக ஜெயா என்ற 17 வயது சிறுத்தை கூண்டில் வைத்து அடைக்கப்பட்டிருந்தது மாதிரிகள் எடுக்கும் போது சிறுத்தை நகரக் கூடாது என்பதற்காக கூண்டு குறுகலாகவும் சிறியதாகவும் இயந்திரம் மூலம் மாற்றப்படும்.

அப்போது இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கூண்டை மீண்டும் பெரிதாக இயலாமல் போகவே கூண்டுக்குள் இருந்த சிறுத்தை மூச்சு திணறியும்  உடல் நசுங்கி யும் பலியானதாக கூறப்படுகிறது

 

Tags :

Share via