ரகசிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர வேண்டாம் -மத்திய அரசு
வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் ஆவணங்களை பகிர வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
ரகசியமான மற்றும் முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் பகிரவேண்டாம் என அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேற்கண்ட செயலிகள் தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால் முக்கிய ஆவணங்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Tags :