ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் இளைஞர்களுக்கு எஸ் பி அறிவுறுத்தல்

by Admin / 01-02-2022 03:02:14pm
ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்து உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் இளைஞர்களுக்கு எஸ்  பி  அறிவுறுத்தல்

ஆன்லைன்ப்ரீ பயர் ரம்மி போன்ற விபரீத விளையாட்டுகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் .

என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அறிவித்துள்ளார் ஓட்டப்பிடாரம் பசுவந்தனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் பயின்றுவரும் மாணவர்கள் தங்களை அறியாமல் இதுபோன்ற.

விளையாட்டுகளில் மூழ்கி படிப்பையும் நேரத்தையும் வீணடித்து வருவதாக தெரிவித்தார் 

மேலும் வாலிபர்கள் உட்பட பலர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு வட்டிக்கு கடன் வாங்கி விளையாடி கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து வருவதாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியாகின்றன.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் செலுத்தி இது போன்ற விளையாட்டுகள் விளையாடுவது தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்
 

 

Tags :

Share via