பிரதமர் மோடி நிகழ்ச்சி ரத்து
குஜராத் தொங்கு பாலம் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய அரசு குஜராத் மாநில அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் மோடி அறிவித்தார். பால விபத்து குறித்து, "என்னுடைய வாழ்க்கையிலேயே, இதுபோன்ற வேதனையை அனுபவித்ததில்லை" என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். இதனிடையே, ஆமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
Tags :