ஜவுளி கடையில் தீ விபத்து.

by Admin / 20-11-2021 09:01:12pm
 ஜவுளி கடையில் தீ விபத்து.

மதுரையில் ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து: 
மதுரையில் ஜவுளி கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மதுரை கீழமாசி வீதியில் ஜவுளிக்கடை  இருந்து இன்று அதிகாலை 6 மணி அளவில் கரும்புகை வெளிவர
 இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் விளக்குத்தூண் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு படை வீரர்கள் ‌ஷட்டரை உடைத்து  தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ½ மணி நேரத்திற்கு பிறகே தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்கு வந்தது.கடையில் இருந்த பெருமளவு, ஆடைகள் எரிந்து சாம்பலாகி இருந்தன.
கடையில் இருந்த இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்தும் வெடித்திருந்தன.இதுதொடர்பாக ஜவுளிக்கடை உரிமையாளர் குமான் சிங் கொடுத்த புகாரின் பேரில் . போலீசாரின்விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

 

 

Tags :

Share via