40 ஆண்டு கால சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

by Admin / 11-02-2022 04:56:02pm
40 ஆண்டு கால சட்டத்தை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

வாகன விபத்துகளில் இழப்பீடு தொகையை மாநில அரசுகள் வழங்கும் 40 ஆண்டு நடைமுறையை மறுபரிசீலனை செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 40 ஆண்டுகளாக வாகன விபத்துக்களும் இழப்பீடு வழங்க மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப் படுவதால் அது விபத்துக்குள்ளான அவர்களுக்கு போதிய அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இவ்வழக்கின் விசாரணை ஜூலை மாதம் வரை ஒத்தி வைத்த நீதிமன்றம் அதற்குள் காப்பீடு நிறுவனங்களின் மூலம் வாகனங்களை காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.

 

Tags :

Share via