இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர் சோகத்தில் கிராமம்
மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி கிராமத்தில் ஒரே நாளில் வயோதிகத் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நல்லத்துக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (88). வயது மூப்பின் காரணமாக இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இதையடுத்து நேற்று மதியம் முதல் அழுது கொண்டிருந்த இவரது மனைவி மருதாம்பாள் (83) நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி சடலத்தில் மயங்கி விழுந்தவர் அங்கேயே உயிரிழந்தார். தம்பதியினருக்கு 50 வருட தாம்பத்திய வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வயோதிக தம்பதியினர் இருவரும் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :