நாகலிங்க மரம்  மகிமை 

by Editor / 11-02-2022 11:45:12pm
நாகலிங்க மரம்  மகிமை 

1."நாகம் குடை பிடிக்க உள்ளே லிங்கம்" இருக்கும் அதியற்புத வடிவில் நாகலிங்கப் புஷ்பம் பூக்கும் .பூவுலகின் மகத்தான .நாம் வாழும் காலத்திலேயே நாகலிங்க மரம் இன்றும் தென்படுவது ,நாம் பெற்ற புன்னியப் பேறே. தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும் 

2.நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.

3.பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை 

4.நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும்  அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

5.நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை உணர்ந்திடலாம் .

6.ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது 

7.ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள்.

8. மிகவும் சுலபமாக  ரூபாய் 100க்கு இப்போது அநேக  nursery ல் கிடைக்கிறது. தங்கள் அருகிலினில்  உள்ள  சிவாலயங்களில் முன்  அனுமதி பெற்று நாகலிங்க செடியை நெட்டு நீர் ஊற்றி நன்கு பராமரித்து வாருங்கள் . மிகவும் சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை செய்து சிவ பரம் பொருளின் அருளுக்கு பாத்திரர் ஆகுங்கள்.

இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க பூவைக்கொண்டு இறைவனை வாங்குங்கள்.  ,நாகலிங்க மரத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாலயங்களில் நெட்டு பராமரியுங்கள்....

 

Tags :

Share via