முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? -பி.ஆர். பாண்டியன்

by Editor / 15-02-2022 10:13:26pm
முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? -பி.ஆர். பாண்டியன்

முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விளக்கவேண்டும் தேனியில் பி.ஆர். பாண்டியன் பேட்டி.கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது. இரு தினங்களுக்கு முன்பு அணைப் பகுதிக்கு அத்துமீறி நுழைந்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணைக்கு தனி கண்காணிப்பு பொறியாளரை நியமித்து அணையைப் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுவரை அணை வலுவாக உள்ளது எனக் கூறிவந்த மத்திய நீர்வள ஆணையம் தற்போது தமிழகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.

 

Tags : Is Mullaiperiyaru Dam under the control of the Government of Tamil Nadu? Or is it under the control of the Government of Kerala?

Share via