மிஸ்டர் இந்தியா-2022 ஆணழகன் போட்டி உப்பளம் ராஜீவ்காந்திமைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .

by Admin / 24-02-2022 05:34:31pm
மிஸ்டர் இந்தியா-2022 ஆணழகன் போட்டி உப்பளம் ராஜீவ்காந்திமைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது .

இந்தியன் பாடி பில்டர்ஸ் அசோசியேசன் சார்பில் புதுச்சேரி பாடி பில்டர்ஸ் மற்றும் பிட்னஸ் டீம் இணைந்து 12-வது ஜூனியர் மிஸ்டர் இந்தியா-2022 ஆணழகன் போட்டியை நடத்தினர். இந்த போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது . 

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 12 வீராங்கனைகள் உள்பட 252 வீரர்கள் கலந்துகொண்ட ஆணழகன்  பாடி பில்டர் போட்டியில்  ஜூனியர் பாடி பில்டர் பிரிவு, மாஸ்டர் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 

கலந்து கொண்டவர்கள் தங்களின்  உடல் அமைப்புக்கு ஏற்றவாறு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

இந்த போட்டியின் ஒரு பிரிவாக மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 60 கிலோ எடைப்பிரிவில் சென்னை கொடூங்கையூரை சேர்ந்த சுரேஷ் என்ற பாடி பில்டர் ஆணழகன் பட்டத்தை வென்றார்.
 
இதேபோல் பல்வேறு பிரிவில் ஆணழகன் பட்டத்தை வென்றவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட  அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். 

மேலும் இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சிவா,சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via