இரு பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிர் பலி

by Admin / 26-02-2022 04:49:25pm
இரு பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிர்  பலி

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரக்கூடிய  9 பள்ளி மாணவர்கள் இன்று பள்ளியை புறக்கணித்துவிட்டு, மெரினா கடற்கரைக்கு வந்தனர். அப்போது நேதாஜி சிலை பின்புறத்தில் உள்ள கடலில் 9 மாணவர்களும் குளித்து கொண்டிருந்தனர்.

கடலில் குளித்துக்கொண்டிருந்த 9 மாணவர்களில் இருவர், கடல் அலையில் சிக்கி காணாமல் போயினர். இதனால் அதிர்ச்சியடைந்த  சக மாணவர்கள் இது குறித்து மெரினா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் மீட்பு படையினர், அலையில் அடித்து செல்லப்பட்ட இரு மாணவர்களை கடலில் இறங்கி தீவிரமாக தேடினர்.

சில மணி நேரத்திற்கு பிறகு உயிரிழந்த நிலையில் இரு மாணவர்களின் உடலும் கரை ஒதுங்கியது.இறந்த மாணவர்களின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் இறந்த மாணவர்களில் ஒருவர் திருநின்றவூரை சேர்ந்த  ஹாரிஷ் மற்றும் மற்றொருவர் ஆகாஷ் என்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை  மேற்கொண்டுவருகின்றன 
 

 

Tags :

Share via