5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

by Editor / 14-05-2021 09:03:17pm
5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்:  தமிழக அரசு உத்தரவு

 

 

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் மு..ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். ஆட்சிக்கு வந்த அடுத்த நொடியே திமுக அரசு அதிரடியாக செயல்பட தொடங்கியது. தற்போது 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “

நெல்லை மாநகர காவல் ஆணையர் அன்பு, தென்மண்டல .ஜி ஆக நியமனம்

 மத்திய மண்டல .ஜி தீபக் தாமோர், கோவை மாநகர ஆணையராக நியமனம்

சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம்

சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி, ஊழல் மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு .ஜி. ஆக நியமனம்

நெல்லை சரக டி..ஜி பிரவீன் குமார் அபினபு, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம்

சென்னை குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் வித்ய ஜெயந்த் குல்கர்னி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இணை இயக்குநராக நியமனம்

சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையர் பவாணீஷ்வரி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு விசாரணை பிரிவு .ஜி. ஆக நியமனம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via