அரசு மதுபான கடையை அகற்ற கோரி பள்ளி மாணவ,மாணவிகள் மனு

by Editor / 07-03-2022 01:58:18pm
அரசு மதுபான கடையை அகற்ற கோரி பள்ளி மாணவ,மாணவிகள் மனு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதி கிராமத்திற்க்கு உட்பட்ட பகுதி காடுதுலா,கொத்தன்குளம் கிராமம் ஆதிதிராவிட கிராமம் ஆகும் ,இந்த கிராமங்களில் சுமார் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையில் புதிதாக அரசு மதுபானக்கடை அமைய இருப்பதாகவும் அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் இந்த இரண்டு கிராமங்களில் இருந்தும் சுமார் 70 மாணவ மாணவிகளுக்கு மேல் 5 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது ,இந்த ஊரில் காலை ஒரு முறை மாலை ஒரு முறை மட்டுமே பேருந்து வசதி உள்ளது,மதுபான கூடம் திறக்கப்பட்டால் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மதுபிரியர்களால் பலவித இன்னல்களுக்கு ஆளாக படும் ஆகவே இப்பகுதியில் பொது மக்களின் நலனையும் மாணவ மணிகள் நலனையும் கருத்தில் கொண்டு மேற்படி இடத்தில் அமைய இருக்கும் மதுபான கடையை தடுத்து நிறுத்தும்படி அப்பகுதி ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

 

Tags : School students petition to remove government liquor store

Share via