உடல்நலத்தில் மிகுந்த கவனம் . மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்.
முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலினை பொறுத்தவரை உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்தக் கூடியவர். இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தினமும் நடைபயிற்சியை கட்டாயம் கடைபிடிக்கக் கூடியவர். அதேபோல் உணவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கக்கூடியவர். கறி, கோழி, உள்ளிட்ட அசைவ உணவுகளை காட்டிலும் மீன் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியவர். அதேபோல் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் ஸ்டாலின்.
இந்நிலையில் உங்களில் ஒருவன் கேள்வி பதில் நிகழ்வில் தனது உடல் ரகசியம் பற்றி மனம் திறந்து பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரிடம் கேட்கப்பட்ட கேள்வியின் விவரம் வருமாறு; 24 மணிநேரமும் பணியாற்றும் முதல்வர் என்ற பெயரை எடுத்திருக்கிறீர்கள். அதற்கேற்ப உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்ளும் ரகசியம் என்ன என்பதை இளைய தலைமுறைக்குத் தெரிவிப்பீர்களா? இந்தக் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் ''எல்லோரும் இதனை ஆச்சர்யமாகத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.நான் எப்போதும் இப்படித்தான் இருந்திருக்கேன்.முன்பு கட்சிப் பணி மட்டும் இருந்தது - இப்போது நிர்வாகப் பணியும் சேர்ந்திருக்கிறது.அதனால் வேலைகள் அதிகமாகி இருக்கின்றன. அதனை மிகச் சரியாகப் பிரித்து - நேரம் ஒதுக்கி செயல்படுகிறேன்.காலையில் உடற்பயிற்சி - மாலையில் நடைப்பயிற்சி, சரியான - அளவான உணவு என எனது உடல் நலத்தில் எப்போதும் கவனமாக இருப்பேன்.வேலைகள் அதிகமாக இருந்தாலே உடல் சோர்வு வராது. இதில் ரகசியம் எதுவும் இல்லை என்றார்.
Tags :