வழக்கறிஞரின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர்

by Staff / 18-04-2024 04:54:56pm
வழக்கறிஞரின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபர்

மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வெள்ளிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (46) , குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராம் பிரகாஷ்( 36) என்பவருக்கும் முன் விரோத இருந்து வந்ததா கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்தபோது. ராம்பிரகாஷ் முன் பகையை மனதில் வைத்து வீட்டில் அத்துமீறி நுழைந்து ஆபாச வார்த்தைகளால் பேசி தகறாறில் ஈடுபட்டதோடு கத்தியால் , ஜெயச்சந்திரன் கழுத்தில், ராம்பிரகாஷ் அறுத்துள்ளார்.இதில் வலியால் துடித்த ஜெயச்சந்திரனை அக்கம் பக்கம் மீட்டு அருகாமையில் உள்ளவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via