தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது: அமைச்சர் துரைமுருகன்

by Staff / 30-03-2024 11:57:32am
தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்கிறது: அமைச்சர் துரைமுருகன்

எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது என திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மத்தியில் இருக்கும் ஆளுங்கட்சியினர் அரசை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதனை வைத்து பழிவாங்குகிறார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். அதற்கு மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும். பாஜக கூட்டணியில் உள்ள கட்சியினர்கள் கேட்டால் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் ஏற்கனவே பயன்படுத்திய சின்னமாக இருந்தாலும் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதனால் மற்றவர்கள் சொல்வது போல் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது தெளிவாக தெரிகிறது என கூறினார்.

 

Tags :

Share via