நீட் தேர்வு - தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் அனுமதி
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது. சுமார் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் 5:20 வரை நடைபெறவுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மதுரையில் உள்ள தேர்வு மையத்தில் தீவிர சோதனைக்குப் பிறகு மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Tags :