காவல் நிலையத்தில் வாலிபர் தீக்குளிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் முருகன் (40), இவர் இன்று மாலை தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் சென்றுள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீக்காயம் அடைந்த முருகன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :