சொகுசு காரில் வந்து ஆடு திருடிய மூவர் கைது.

by Editor / 24-10-2023 09:40:06am
சொகுசு காரில் வந்து ஆடு திருடிய மூவர் கைது.

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி அருகே வைரகோபுரம் பகுதியை சேர்ந்த அராபத் ( 28 ) ,  காரைக்குடி அருகே மஜா தோப்புதிடல்  ஆறுமுகம் ( 52 ) காரைக்குடி  அருகே ஒத்தகடை செல்வராஜ் ( 55 ) ஆகிய மூவரும் இன்னோவா சொகுசு காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழபாலம்  அடுத்த செங்குளம்  மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் இரண்டு ஆடுகளும் முத்துபேட்டை சாலையில்  இரண்டு ஆடுகள் என மொத்தம் நான்கு ஆடுகளையும்  திருடிக்கொண்டு கும்பகோணம் சாலையில் செல்வதற்காக அண்ணவாசல் பகுதியில் வரும்போது அப்பகுதியில் ஆடுகள் நிற்பதைக்கண்ட திருட்டுக்கும்பல் அவற்றையும் கடத்திச்செல்ல வாகனத்தை மெதுவாக சாலை ஓரம் கட்டியபோது அப்பகுதி வழியாக வந்த மக்கள் சந்தேகம் அடைந்து இவர்கள் சென்ற வாகனத்தை சோதனையிட்டபோது சொகுசு வாகனத்தில் ஆடுகள் திருடப்பட்டு காருக்குள் அடைத்துவைக்கப்பட்டது தெரிய வந்தது உடனடியாக மன்னார்குடிகாவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்துவந்த  காவல்துறையினர்  மூவரையும் கடத்தப்பட்ட ஆடுகளோடு காரை  டி.எஸ்.பி அஸ்வத் ஆண்டோ அந்தோணி முன்பு நிறுத்தபட்டு விசாரணை நடத்தியதின் அடிப்படையில் மூவரும் நான்கு ஆடுகள் திருடியதை ஒப்புகொண்டனர் .விசாரணையில்  மூவரின் பெயரிலும் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது . மன்னார்குடி காவல்துறையினர் சொகுசு கார் மற்றும் நான்கு ஆடுகளையும் பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.  

 

Tags : சொகுசு காரில் வந்து ஆடு திருடிய மூவர் கைது.

Share via