ஒடிசாவில் கனமழை 10 பேர் மின்னல் தாக்கி பலி. 

by Editor / 03-09-2023 09:22:19am
ஒடிசாவில் கனமழை 10 பேர் மின்னல் தாக்கி பலி. 

ஒடிசாவில் சனிக்கிழமையன்று ஆறு மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.இதில்  தனித்தனி சம்பவங்களில் குறைந்தது 10 பேர் மின்னல் தாக்கி  உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்தனர். புவனேஸ்வர், கட்டாக் உள்ளிட்ட கடலோர ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை மற்றும் மின்னலின் போது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

 

Tags : ஒடிசாவில் கனமழை 10 பேர் மின்னல் தாக்கி பலி. 

Share via