நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

by Staff / 14-10-2022 02:01:52pm
நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு 12 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தற்போது இந்த மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via