மகுடஞ்சாவடியில் கோர விபத்து 17 பயணிகள் படுகாயம்

by Staff / 14-10-2022 02:04:34pm
மகுடஞ்சாவடியில் கோர விபத்து 17 பயணிகள் படுகாயம்

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட மகுடஞ்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் முன்னாள் செற்றுக்கொண்டிருந்த கனரக லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் நடத்துனர் உட்பட 17 பயணிகள் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்று காயமடைந்தவர்களை மீட்டு மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். இச்சபவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories