வெறிநாய் கடித்து ஆபத்தான நிலையில் சிறுவன் தென்காசி தலைமை மருத்துவமனையில் அனுமதி

by Editor / 23-08-2023 10:31:10pm
வெறிநாய் கடித்து ஆபத்தான நிலையில் சிறுவன் தென்காசி தலைமை மருத்துவமனையில் அனுமதி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அக்ஸா பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் தம்பதி அப்துல்லா-யாஸ்மின் இவர்களது நான்கு வயதான மகன் பயான் அகமது. இன்று மாலை அச்சிறுவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது வெறி நோய் ஒன்று ஆபத்தான முறையில் கடித்துள்ளது. அதனால் அச்சிறுவனின் வாய்ப்பகுதி கிழிந்து ரத்தத்துடன் கடையநல்லூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான் அங்கு போதிய சிகிச்சை வசதி இல்லாததால் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக அச்சிறுவன் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டான். தற்போது தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் உள்நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் கடையநல்லூர் பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் தொல்லை இருப்பதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இதே போல் பல குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக சிறுவனின் தந்தை கூறியுள்ளார். இன்று மாலை அதே தெருவில் வசித்து வரும் மற்றொரு சிறுவனை நாய் கடித்து கடையநல்லூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags : வெறிநாய் கடித்து ஆபத்தான நிலையில் சிறுவன்

Share via