வெடி விபத்தில் இறந்த 5 பெண்கள்! தரைமட்டமான அறைகள்

by Staff / 09-05-2024 04:45:13pm
வெடி விபத்தில் இறந்த 5 பெண்கள்! தரைமட்டமான அறைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் என்ற பட்டாசு ஆலை உள்ளது. பட்டாசுக்கு மருந்து நிரப்பும் பணியின் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் அதில் ஐந்து பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது. விபத்து காரணமாக பட்டாசு ஆலையில் இருந்த பத்து அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via